Vasalile Poosani Poo Song Lyrics in Tamil from Senbagame Senbagame Movie. Vasalile Poosani Poo Song Lyrics penned in Tamil by Gangai Amaran.
பாடல்: | வாசலிலே பூசணி பூ |
---|---|
படம்: | செண்பகமே செண்பகமே |
வருடம்: | 1988 |
இசை: | இளையராஜா |
வரிகள்: | கங்கை அமரன் |
பாடகர்: | SP பாலசுப்ரமணியம், S ஜானகி |
Vasalile Poosani Poo Lyrics in Tamil
ஆண்: வாசலிலே பூசணிப்பூ
வச்சிப்புட்டா வச்சிப்புட்டா
நேசத்திலே என் மனசை
தச்சிப்புட்டா தச்சிப்புட்டா
ஆண்: பூவும் பூவும்
ஒன்னு கலந்தது இப்போது
தேனும் பாலும்
பொங்கி வழியுது இப்போது
பெண்: வாசலிலே பூசணிப்பூ
வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே என் மனசை
தச்சதென்ன தச்சதென்ன
பெண்: பிரிச்ச போதும்
பிரியவில்லையே சொந்தம் நானே
வழிய மறந்த குயிலும் சேர்ந்தது
ஆண்: ஆ கோலம்போட்டு
ஜாடை சொன்னது கன்னி மானே
கோடு நமக்கு யாரு போட்டது
பெண்: நெஞ்சுக்குள்ளே நெஞ்ச வச்சு
உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்
நெத்தியிலே பொட்டுவச்சு
உங்களைத்தான் தொட்டுக்கிட்டேன்
ஆண்: நானும் நீயும் ஒன்னாசேந்தா
நாளும் நாளும் சந்தோஷம்
பெண்: ராகம் தாளம் சேரும் நேரம்
ஆனந்தம் பாடும் சங்கீதம்
ஆண்: வாசலிலே பூசணிப்பூ
வச்சிப்புட்டா வச்சிப்புட்டா
பெண்: நேசத்திலே என் மனசை
தச்சதென்ன தச்சதென்ன
ஆண்: மீண்டும் மீண்டும்
கூடி சேருது பொன்னிஆறு
மோகத்தோடு கூடி பாடுது
பெண்: ஆ கேட்டுகேட்டு
கிறங்கத்தோணுது உங்க பாட்டு
கேள்வி போல என்னை வாட்டுது
ஆண்: ஆத்து வெள்ளம் மேட்ட விட்டு
பள்ளத்துக்கு ஓடிவரும்
ஆசையிது தேடிக்கிட்டு
ஆனந்தமாய் பாடிவரும்
பெண்: ஏதோ ஒன்னை
சொல்லிச்சொல்லி
என்னை இப்போ கிள்ளாதே
ஆண்: போதும் போதும்
கண்ணால் என்னை
கட்டி இழுக்கற செண்பகமே
பெண்: வாசலிலே பூசணிப்பூ
வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே என் மனசை
தச்சதென்ன தச்சதென்ன
பெண்: பூவும் பூவும்
ஒன்னு கலந்தது இப்போது
தேனும் பாலும்
பொங்கி வழியுது இப்போது
ஆண்: வாசலிலே பூசணிப்பூ
வச்சிப்புட்டா வச்சிப்புட்டா
நேசத்திலே என் மனசை
தச்சிப்புட்டா தச்சிப்புட்டா