Nee Kaatru Naan Maram Song Lyrics in Tamil from Nilaave Vaa Movie. Nee Kaatru Naan Maram Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | நிலாவே வா |
---|---|
வருடம்: | 1998 |
பாடலின் பெயர்: | நீ காற்று நான் மரம் |
இசையமைப்பாளர்: | வித்யாசாகர் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | ஹரிஹரன், KS சித்ரா |
பாடல் வரிகள்:
ஆண்: நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும்
தலையாட்டுவேன்
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும்
தலையாட்டுவேன்
ஆண்: நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும்
ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான்
நான் இருப்பேன்
ஆண்: நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும்
தலையாட்டுவேன்
பெண்: நீ அலை நான் கரை
என்னை அடித்தாலும்
ஏற்றுக்கொள்வேன்
ஆண்: நீ உடல் நான் நிழல்
நீ விழ வேண்டாம்
நான் விழுவேன்
பெண்: நீ கிளை நான் இலை
உன்னை ஒட்டும் வரைக்கும்
தான் உயிர்த்திருப்பேன்
ஆண்: நீ விழி நான் இமை
உன்னை சேரும் வரைக்கும்
நான் துடித்து இருப்பேன்
பெண்: நீ சுவாசம்
நான் தேகம் நான்
உன்னை மட்டும்
உயிர் தொட அனுமதிப்பேன்
ஆண்: நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும்
தலையாட்டுவேன்
ஆண்: நீ வானம் நான் நீலம்
உன்னில் நானாய்
கலந்திருப்பேன்
பெண்: நீ எண்ணம் நான் வார்த்தை
நீ சொல்லும் பொழுதே
வெளிப்படுவேன்
ஆண்: நீ வெயில் நான் குயில்
உன் வருகை பார்த்து
தான் நான் இசைப்பேன்
பெண்: நீ உடை நான் இடை
உன்னை உறங்கும் பொழுதும்
நான் உடுத்திருப்பேன்
ஆண்: நீ பகல் நான் ஒளி
என்றும் உன்னை மட்டும்
சார்ந்தே நான் இருப்பேன்
பெண்: நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும்
தலையாட்டுவேன்
ஆண்: நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும்
ஏந்திக்கொல்வேன்
பெண்: நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான்
நான் இருப்பேன்
ஆண்: நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும்
தலையாட்டுவேன்