Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Naan Erikarai Melirunthu Song Lyrics

Naan Erikarai Melirunthu Song Lyrics in Tamil from Chinna Thayee Movie. Naan Erikarai Melirunthu Song Lyrics has penned in Tamil by Vaali.

படத்தின் பெயர்:சின்ன தாயி
வருடம்:1992
பாடலின் பெயர்:நான் ஏரிக்கரை மேலிருந்து
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:KJ யேசுதாஸ், ஸ்வர்ணலதா

பாடல் வரிகள்

ஆண்: நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே

ஆண்: என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை
உள்ளாற பூட்டி வச்சே
ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

பெண்: நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
குழு: மாமனுக்கு காத்திருந்தேன் காணலே
பெண்: அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடி போன பின்னும்
குழு: வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே

பெண்: நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே
அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே

பெண்: என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக‌ போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகள
உள்ளாற பூட்டி வச்சே
திண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே

ஆண்: நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
குழு: ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
ஆண்: மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
குழு: சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே

ஆண்: தூரக் கிழக்கு கரை ஓரந்தான்
தாழப் பறந்து வரும் மேகந்தான்

ஆண்: உன்கிட்ட சேராதோ
என் பாட்ட கூறாதோ
ஒண்ணாக நாம் கூடும்
சந்தர்ப்பம் வாராதோ

பெண்: உன் கூட நானும் சேர
ஒத்த காலில் நின்னேனே
செந்நாரை கூட்டத்தோடு
சேதி ஒண்ணு சொன்னேனே

ஆண்: கண்ணாலம் காட்சி எப்போது
எந்நாளும் என் நேசம் தப்பாது

பெண்: நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே

ஆண்: மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே

பெண்: மாமன் நெனப்பில்
சின்னத் தாயிதான்
மாசக் கணக்கில்
கொண்ட நோயிதான்

பெண்: மச்சான் கை பட்டாக்கா
மூச்சூடும் தீராதோ
அக்காளின் பொண்ணுக்கோர்
பொற்காலம் வாராதோ

ஆண்: கையேந்தும் ஆட்டு குட்டி
கன்னிப் பொண்ணா மாறதோ
மையேந்தும் கண்ணை காட்டி
மையல் தீரபேசாதோ

பெண்: உன்னாலே தூக்கம் போயாச்சி
உள்ளார ஏதேதோ ஆயாச்சு

ஆண்: நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசைபார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே

பெண்: என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை
உள்ளார பூட்டி வச்சு
திண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே

ஆண்: நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசைபார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே

பெண்: அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடிபோன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான தோணலே


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.