Muthu Mani Sudare Song Lyrics

Muthu Mani Sudare Song Lyrics in Tamil from Anbulla Rajinikanth Movie. Muthu Mani Sudare Song Lyrics has penned in Tamil by Na.Kamarajan.

படத்தின் பெயர்:அன்புள்ள ரஜினிகாந்த்
வருடம்:1984
பாடலின் பெயர்:முத்து மணி சுடரே
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:நா. காமராஜன்
பாடகர்கள்:KJ யேசுதாஸ்

பாடல் வரிகள்:

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே
ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே

அழகாய் நாள் தோறும்
புதுமை கொண்டாடும்
மலரே நீ பேசு
அவளைக் கண்டாயோ

தானாக தள்ளாடும் பூவண்ணமே
தானாக தள்ளாடும் பூவண்ணமே
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய்

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

காற்றினில் தேர் போல ஓடிடும் மானே
தன் வழி போனாளே கனிமொழி எங்கே

அலை போல் பாய்ந்தோடும்
முயலே நீ சொல்லு
தனியே பார்த்தாயோ
அவளும் வந்தாளோ

நான் தேடும் பொன்மாலை கண்டேனடி
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து
ஒளிந்த பதுமை நேரில் வந்தது

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *