Eswariye Mahamayi Song Lyrics in Tamil

Eswariye Mahamayi Song Lyrics in Tamil from Tamil Amman Songs. LR Eswari’s Eswariye Mahamayi Mariyamma Song Lyrics in Tamil.

பாடல் வரிகள்

ஈஸ்வரியே மகமாயி
மாரியம்மா
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க
வாரும் அம்மா

ஆயிரம் கண் படைச்சவளே
பாரம்மா
இங்கு உன்னை அன்றி வேறு கதி
ஏதம்மா

ஈஸ்வரியே மகமாயி
மாரியம்மா
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க
வாரும் அம்மா

சமயபுரம் சன்னதியின்
வாசலிலே
லோக சங்கரியே உருகி நின்றோம்
பூஜையிலே

கருணை உள்ள தெய்வமாக
நீ இருப்பாய்
நாங்க கொண்டாட வந்ததற்கும்
பலன் கொடுப்பாய்

ஈஸ்வரியே மகமாயி
மாரியம்மா
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க
வாரும் அம்மா

வேண்டுவோர்க்கு வாழ்வெல்லாம்
நலம் தருவாய்
சிங்க வாகனத்தில் சக்தியாக
வலம் வருவாய்

ஊர் வாழ மழையாக
வடிவெடுப்பாய்
இந்த உலகத்துக்கே உன் அருளால்
குடை பிடிப்பாய்

ஈஸ்வரியே மகமாயி
மாரியம்மா
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க
வாரும் அம்மா

படவேட்டு எல்லையிலே
குடி இருப்பாய்
நல்ல பத்தினிகள் மஞ்சளுக்கு
துணை இருப்பாய்

படவேட்டு எல்லையிலே
குடி இருப்பாய்
நல்ல பத்தினிகள் மஞ்சளுக்கு
துணை இருப்பாய்

மங்களங்கள் பெருக வேணும்
சக்தியிலே
மங்களங்கள் பெருக வேணும்
சக்தியிலே
அதை குங்கமமாய் தரவேணும்
நெத்தியிலே

ஈஸ்வரியே மகமாயி
மாரியம்மா
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க
வாரும் அம்மா

ஆயிரம் கண் படைச்சவளே
பாரம்மா
இங்கு உன்னை அன்றி வேறு கதி
ஏதம்மா

ஈஸ்வரியே மகமாயி
மாரியம்மா
நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க
வாரும் அம்மா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *