Poovadai Kattikittu Song Lyrics in Tamil from Famous Amman Songs. Poovadai Kattikittu Song Tamil Lyrics from LR Eswari Amman Padalgal.
பாடல் வரிகள்
பூவாடை கட்டிக்கிட்டு
தாழம்பூ சூட்டிக்கிட்டு
பூவாடை கட்டிக்கிட்டு
தாழம்பூ சூட்டிக் கிட்டு
பொன்னாத்தா சுகுமாரி
ஆடியிலே ஆடி வந்தா
பூப்போல சிரிச்சிக்கிட்டு
தீச்சட்டி எடுத்துக்கிட்டு
பூப்போல சிரிச்சிக்கிட்டு
தீச்சட்டி எடுத்துக்கிட்டு
ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்
கொடுக்க வந்தா மாரியாத்தா
ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்
கொடுக்க வந்தா மாரியாத்தா
கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா
கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா
பாம்பு படை சூழ்ந்திடவே
வேம்புத்தேரில் ஏறும் ஆத்தா
பம்பை மேளம் முழங்கிடவே
பவனி வரும் முப்பாத்தா
பாம்பு படை சூழ்ந்திடவே
வேம்புத்தேரில் ஏறும் ஆத்தா
பம்பை மேளம் முழங்கிடவே
பவனி வரும் முப்பாத்தா
நோன்பு கொண்டு தொழுபவரின்
நோய் தீர்க்கும் மாரியாத்தா
நோன்பு கொண்டு தொழுபவரின்
நோய் தீர்க்கும் மாரியாத்தா
வேண்டும் வரம் தந்து நம்மை
எப்போதும் காத்திடும் ஆத்தா
வேண்டும் வரம் தந்து நம்மை
எப்போதும் காத்திடும் ஆத்தா
சேமாத்தா பூவாத்தா நல்லாத்தா
சூராத்தா கருத்தாத்தா என்னாத்தா
சேமாத்தா பூவாத்தா நல்லாத்தா
சூராத்தா கருத்தாத்தா என்னாத்தா
பட்டு சேலை பளபளக்க
குங்குமப்பொட்டு சொலிசொலிக்க
வெட்டருவாளுடன் மாகாளி
வினைகளை விரட்டிட ஓடி வந்தா
பட்டு சேலை பளபளக்க
குங்குமப்பொட்டு சொலிசொலிக்க
வெட்டருவாளுடன் மாகாளி
வினைகளை விரட்டிட ஓடி வந்தா
எட்டுதிக்குகள் புகழ் மணக்க
கொட்டு வாத்தியம் இசையொலிக்க
எட்டுதிக்குகள் புகழ் மணக்க
கொட்டு வாத்தியம் இசையொலிக்க
பொட்டழகி பூமாயி
பூவும் பொட்டும் தந்து நிற்பா
பொட்டழகி பூமாயி
பூவும் பொட்டும் தந்து நிற்பா
எல்லாத்தா முப்பாத்தா மணியாத்தா
வீராத்தா மேகாத்தா காளியாத்தா
எல்லாத்தா முப்பாத்தா மணியாத்தா
வீராத்தா மேகாத்தா காளியாத்தா
பூவாடை கட்டிக்கிட்டு
தாழம்பூ சூட்டிக்கிட்டு
பூவாடை கட்டிக்கிட்டு
தாழம்பூ சூட்டிக்கிட்டு
பொன்னாத்தா சுகுமாரி
ஆடியிலே ஆடி வந்தா
பூப்போல சிரிச்சிக்கிட்டு
தீச்சட்டி எடுத்துக்கிட்டு
பூப்போல சிரிச்சிக்கிட்டு
தீச்சட்டி எடுத்துக்கிட்டு
ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்
கொடுக்க வந்தா மாரியாத்தா
ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்
கொடுக்க வந்தா மாரியாத்தா
கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா
கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா