Thodakkam Mangalyam Song Lyrics in Tamil

Thodakkam Mangalyam Song Lyrics in Tamil from Bangalore Naatkal. Thodakkam Mangalyam Song Lyrics Penned in Tamil by Pazhani Bharathi.

படத்தின் பெயர்:பெங்களூர் நாட்கள்
வருடம்:2016
பாடலின் பெயர்:தொடக்கம் மாங்கல்யம்
இசையமைப்பாளர்:கோபி சுந்தர்
பாடலாசிரியர்:பழனி பாரதி
பாடகர்கள்:விஜய் யேசுதாஸ், திவ்யா மேனன்,
சச்சின் வாரியர்

பாடல் வரிகள்:

ஆண்: மல்லிகையில் ஒரு மாலை
தங்கச்சரிகையில் ஒரு சேலை
ஆ மல்லிகையில் ஒரு மாலை
தங்கச்சரிகையில் ஒரு சேலை
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்
கல்யாணம் கண்டுபிடித்தான்

ஆண்: தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா

ஆண்: தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா

ஆண்: தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா

ஆண்: அடடா நீ அழகி என்று
ஆர்ப்பரிப்பான் உன் கணவன்
வெட்கத்தில் நீயும் கேட்பாய்
நிஜமா என்று

ஆண்: கதை கொஞ்சம் மாறும்போது
வார்த்தைகளெல்லாம் பாழாகும்
குழு: வாழ்வே ஓர் போர்க்களமாகும்
ஹே ஹே நீ மோதிட வேண்டும்

ஆண்: தாலி உன் தாலி
அது உன்னைக் கட்டும் வேலி
கூடைக்குள்ளே மூச்சுமுட்டும்
கல்யாணக் கோழி

பெண்: தோழா என் தோழா
நான் ஆகாயத்தின் மேலே
பறந்துகொண்டே தேன் குடிப்பேன்
தேன்சிட்டு போலே அ

ஆண்: அம்மி மிதிக்கிற
வாழ்க்கையெல்லாம்
நினைப்பதுபோல் இருப்பதில்லை
சிறகினை அடகுவைத்தால்
பறவையின் வாழ்வில் சுகம் இல்லை

பெண்: அணைப்பதும் அடங்கி நின்று
தவிப்பதும் ஓர் மயக்கம்தானே
நினைத்ததும் இனிப்பதென்ன
ஒரு சொர்க்கம்

ஆண்: தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா

ஆண்: மல்லிகையில் ஒரு மாலை
தங்கச்சரிகையில் ஒரு சேலை
ஆ மல்லிகையில் ஒரு மாலை
தங்கச்சரிகையில் ஒரு சேலை
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்
கல்யாணம் கண்டுபிடித்தான்

ஆண்: தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா

ஆண்: தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா

ஆண்: தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *