Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Thaayin Manikodi Paareer Song Lyrics

Thaayin Manikodi Paareer Song Lyrics in Tamil for Bharathiyar Padalgal. Thaayin Manikodi Paareer Song Lyrics has penned by Bharathiyar.

பாடல் வரிகள்:

தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் – அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் – செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்

தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர்

பட்டுத் துகிலென லாமோ – அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் – அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம்

தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர்

இந்திரன் வச்சிரம் ஓர்பால் – அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் – அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ

தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர்

கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் – எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்க் குரியர் அவ்வீரர் – தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்

தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர்

அணியணி யாயவர் நிற்கும் – இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ
பணிகள் பொருந்திய மார்பும் – விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்

தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர்

செந்தமிழ் நாட்டுப் பொருநர் – கொடுந்
தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் – தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர்

தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர்

கன்னடர் ஓட்டிய ரோடு – போரில்
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்
பொனகர்த் தேவர்க ளொப்ப – நிற்கும்
பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர்

தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர்

பூதலம் முற்றிடும் வரையும் – அறப்
போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் – பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்

தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர்

பஞ்ச நதத்துப் பிறந்தோர் – முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்
துஞ்சும் பொழுதினும் தாயின் – பதத்
தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும்

தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர்

சேர்ந்ததைக் காப்பது காணீர் அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க
தேர்ந்தவர் போற்றும் பரத – நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க

தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர்


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.