Neeya Pesiyathu En Anbe Song Lyrics in Tamil from Thirumalai Movie. Neeya Pesiyathu En Anbe Song Lyrics has penned by Yugabharathi.
படத்தின் பெயர்: | திருமலை |
---|---|
வருடம்: | 2003 |
பாடலின் பெயர்: | நீயா பேசியது என் அன்பே |
இசையமைப்பாளர்: | வித்யாசாகர் |
பாடலாசிரியர்: | யுகபாரதி |
பாடகர்: | சங்கர் மகாதேவன் |
Neeya Pesiyathu Lyrics in Tamil
நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை எதுவரை
நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்
வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்
நீயா பேசியது என் அன்பே
நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே
தீயை வீசியது
கண்களிலே உன் கண்களிலே
பொய் காதல் நாடகம் ஏனடி
அன்பினிலே மெய் அன்பினிலே
ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது என் அன்பே
நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே
தீயை வீசியது
நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை எதுவரை
நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்
வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்
ஓஹோ ஏதோ நான் இருந்தேன்
என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்
காற்றை மொழி பெயர்த்தேன்
அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய்
இரவிங்கே பகல் இங்கே
தொடுவானம் போனதெங்கே
உடல் இங்கே உயிர் இங்கே
தடுமாறும் ஆவி எங்கே
உருகினேன் நான் உருகினேன்
இன்று உயிரில் பாதி கருகினேன்
ஓ நீயா பேசியது
என் அன்பே நீயா பேசியது
வேரில் நான் அழுதேன்
என் பூவும் சோகம் உணரவில்லை
வேஷம் தரிக்கவில்லை
முன்நாளில் காதல் பழக்கமில்லை
உனக்கென்றே உயிர் கொண்டேன்
அதில் ஏதும் மாற்றம் இல்லை
பிரிவென்றால் உறவுண்டு
அதனாலே வாட்டம் இல்லை
மறைப்பதால் நீ மறைப்பதால்
என் காதல் மாய்ந்து போகுமா
நீயா பேசியது என் அன்பே
நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே
தீயை வீசியது
கண்களிலே உன் கண்களிலே
பொய் காதல் நாடகம் ஏனடி
அன்பினிலே மெய் அன்பினிலே
ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது நீயா பேசியது