Karuvakaatu Karuvaaya Song Lyrics in Tamil from Marudhu Movie. Karuvakaatu Karuvaaya Song Lyrics penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | மருது |
---|---|
வருடம்: | 2016 |
பாடலின் பெயர்: | கருவகாட்டு கருவாயா |
இசையமைப்பாளர்: | D.இமான் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | ஜிதின் ராஜ், வந்தனா ஸ்ரீனிவாசன் |
பாடல் வரிகள்:
பெண்: கருவகாட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சுமுட்ட விடுவாயா
பெண்: கால் வளந்த மன்னவனே வா
காவலுக்கு நின்னவனே வா வா
பெண்: நான் வெள்ளாங்கரட்டில்
முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து
வேலி கட்டு
பெண்: உன் அண்ணாக்கயத்தில்
முடிஞ்சிக்கிட்டு
என் ஆயுள் முழுக்க
அன்ப கொட்டு
பெண்: கருவகாட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சுமுட்ட விடுவாயா
பெண்: தன்னந்தனி மானு
இவ தண்ணியில்லா மீனு
மஞ்சத்தாலி போட்ட
நீ மட்டும்தானே ஆணு
ஆண்: குத்தமில்லா பொண்ணு
நீ குத்தவச்ச தேனு
கண்ணுக்குள்ள வச்சு
உன்ன காப்பாத்துவேன் நானு
பெண்: தொடுத்த பூவுக்கு நாா் பொறுப்பு
என் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு
இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு
என் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு
ஆண்: நட்சத்திரம் எத்தனையோ
எண்ணிக்க தொிஞ்சது எனக்கு
மச்சம் மட்டும் எத்தனையோ
இன்னும் எடுக்கல கணக்கு
பெண்: நான் வெள்ளாங்கரட்டில்
முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து
வேலி கட்டு
பெண்: உன் அண்ணாக்கயத்தில்
முடிஞ்சிக்கிட்டு
என் ஆயுள் முழுக்க
அன்ப கொட்டு
பெண்: கருவகாட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
ஆண்: ஏய் பாசமுள்ள நெஞ்சில்
நான் வாசம் பண்ணப் போறேன்
வாரம் வரும் முன்னே
உன்ன மாசம் பண்ணப்போறேன்
பெண்: சாமக்கோழி கூவ
உன் சங்கதிக்கு வாரேன்
ஒத்த முத்தம் தந்தா
நான் ரெட்டப்புள்ள தாரேன்
ஆண்: பாலு தயிரா உறையும் முன்னே
பத்து தடவ சோ்ந்திருப்போம்
தயிரு மோரா மாறுமட்டும்
உயிரும் உயிரும் கலந்திருப்போம்
பெண்: உசுரையும் மானத்தையும்
உன்கிட்ட குடுத்திட்டேன் தலைவா
ஏழுசென்மம் தீரு மட்டும்
எனக்கு இருக்கணும் உறவா
பெண்: நான் வெள்ளாங்கரட்டில்
முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து
வேலி கட்டு
பெண்: உன் அண்ணாக்கயத்தில்
முடிஞ்சிக்கிட்டு
என் ஆயுள் முழுக்க
அன்ப கொட்டு
பெண்: கருவகாட்டு கருவாயா
சிறுகுறிப்பு:
மருது-ஆனது 2016-ல் தமிழில் வெளியான சண்டை திரைப்படம் ஆகும். இதனை முத்தையா இயக்கியுள்ளார்.
இதில் விஷால், ஸ்ரீ திவ்யா, சூரி, ராதா ரவி, R K சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் பாடல் வரிகளை வைரமுத்து, யுகபாரதி இருவரும் எழுதுயுள்ளனர். அப்பாடல் வரிகளுக்கு D.இமான் இசையமைத்துள்ளார். மேலும் அறிய