Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Karuvakaatu Karuvaaya Song Lyrics

Karuvakaatu Karuvaaya Song Lyrics in Tamil from Marudhu Movie. Karuvakaatu Karuvaaya Song Lyrics penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:மருது
வருடம்:2016
பாடலின் பெயர்:கருவகாட்டு கருவாயா
இசையமைப்பாளர்:D.இமான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:ஜிதின் ராஜ்,
வந்தனா ஸ்ரீனிவாசன்

பாடல் வரிகள்:

பெண்: கருவகாட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சுமுட்ட விடுவாயா

பெண்: கால் வளந்த மன்னவனே வா
காவலுக்கு நின்னவனே வா வா

பெண்: நான் வெள்ளாங்கரட்டில்
முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து
வேலி கட்டு

பெண்: உன் அண்ணாக்கயத்தில்
முடிஞ்சிக்கிட்டு
என் ஆயுள் முழுக்க
அன்ப கொட்டு

பெண்: கருவகாட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சுமுட்ட விடுவாயா

பெண்: தன்னந்தனி மானு
இவ தண்ணியில்லா மீனு
மஞ்சத்தாலி போட்ட
நீ மட்டும்தானே ஆணு

ஆண்: குத்தமில்லா பொண்ணு
நீ குத்தவச்ச தேனு
கண்ணுக்குள்ள வச்சு
உன்ன காப்பாத்துவேன் நானு

பெண்: தொடுத்த பூவுக்கு நாா் பொறுப்பு
என் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு
இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு
என் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு

ஆண்: நட்சத்திரம் எத்தனையோ
எண்ணிக்க தொிஞ்சது எனக்கு
மச்சம் மட்டும் எத்தனையோ
இன்னும் எடுக்கல கணக்கு

பெண்: நான் வெள்ளாங்கரட்டில்
முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து
வேலி கட்டு

பெண்: உன் அண்ணாக்கயத்தில்
முடிஞ்சிக்கிட்டு
என் ஆயுள் முழுக்க
அன்ப கொட்டு

பெண்: கருவகாட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா

ஆண்: ஏய் பாசமுள்ள நெஞ்சில்
நான் வாசம் பண்ணப் போறேன்
வாரம் வரும் முன்னே
உன்ன மாசம் பண்ணப்போறேன்

பெண்: சாமக்கோழி கூவ
உன் சங்கதிக்கு வாரேன்
ஒத்த முத்தம் தந்தா
நான் ரெட்டப்புள்ள தாரேன்

ஆண்: பாலு தயிரா உறையும் முன்னே
பத்து தடவ சோ்ந்திருப்போம்
தயிரு மோரா மாறுமட்டும்
உயிரும் உயிரும் கலந்திருப்போம்

பெண்: உசுரையும் மானத்தையும்
உன்கிட்ட குடுத்திட்டேன் தலைவா
ஏழுசென்மம் தீரு மட்டும்
எனக்கு இருக்கணும் உறவா

பெண்: நான் வெள்ளாங்கரட்டில்
முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து
வேலி கட்டு

பெண்: உன் அண்ணாக்கயத்தில்
முடிஞ்சிக்கிட்டு
என் ஆயுள் முழுக்க
அன்ப கொட்டு

பெண்: கருவகாட்டு கருவாயா

சிறுகுறிப்பு:

மருது-ஆனது 2016-ல் தமிழில் வெளியான சண்டை திரைப்படம் ஆகும். இதனை முத்தையா இயக்கியுள்ளார்.
இதில் விஷால், ஸ்ரீ திவ்யா, சூரி, ராதா ரவி, R K சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் பாடல் வரிகளை வைரமுத்து, யுகபாரதி இருவரும் எழுதுயுள்ளனர். அப்பாடல் வரிகளுக்கு D.இமான் இசையமைத்துள்ளார். மேலும் அறிய

Search

All lyrics are provided for educational purpose only.