Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Enge Enathu Kavithai Song Lyrics in Tamil by Kandukonden Kandukonden. Enge Enathu Kavithai Song Lyrics penned by Vairamuthu.

படத்தின் பெயர்:கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்
வருடம்:2000
பாடலின் பெயர்:எங்கே எனது கவிதை
இசையமைப்பாளர்:ஏ.ஆா்.ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:K.S.சித்ரா, ஸ்ரீனிவாஸ்

பாடல் வரிகள்:

குழு: பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

குழு: பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

பெண்: எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

பெண்: விழியில் கரைந்துவிட்டதோ
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

பெண்: எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

பெண்: மாலை அந்திகளில்
மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெய்யல் தாரியொழுகும்
நகர வீதிகளில்
மையல் கொண்டு மலா் வாடுதே

பெண்: மேகம் சிந்தும்
இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும்
தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே

பெண்: அழகிய திருமுகம்
ஒருதரம் பாா்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு
ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

குழு: பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

குழு: பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

பெண்: எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

பெண்: ஒரே பாா்வை அட
ஒரே வாா்த்தை அட
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும்
அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்று ஏங்குதே

பெண்: வோ்வை பூத்த
உந்தன் சட்டை வாசம்
இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும்
முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே…

பெண்: பாறையில் செய்தது
என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில்
வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

பெண்: எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.