Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Enga Karuppasamy Song Lyrics in Tamil

Enga Karuppasamy Song Lyrics in Tamil from Karuppasamy Songs. Enga Karuppasamy Song Lyrics has sung in Tamil by Veeramanidasan.

Enga Karuppasamy Lyrics in Tamil

எங்க கருப்பசாமி
அவர் எங்க கருப்பசாமி
எங்க கருப்பசாமி
அவர் எங்க கருப்பசாமி

அக்கினியில் பிறந்தவராம்
அரனாரின் மைந்தனவன்
எங்க கருப்பசாமி
அவர் எங்க கருப்பசாமி

முன் கொண்டாய் காரனவன்
முன்கோப காரனவன்
சந்தனப் பொட்டுக்காரன்
சபரிமலை காவல்காரன்
எங்க கருப்பசாமி
அவர் எங்க கருப்பசாமி

ஜடைமுடி காரனவன்
சாமிகளைக் காத்திடுவான்
சல்லடையைக் கட்டி வரான்
சாஞ்சி சாஞ்சி ஆடி வரான்
எங்க கருப்பசாமி
அவர் எங்க கருப்பசாமி

வில்லு பாட்டுப் பாடி வரான்
வித விதமா ஆடி வரான்
பந்தம் கையில் பிடிச்சி வரான்
பாரி வேட்டை ஆடி வரான்
எங்க கருப்பசாமி
அவர் எங்க கருப்பசாமி

அச்சன் கோவில் ஆண்டவர்க்கு
எதிராக இருப்பவராம்
பதினெட்டு படிகளுக்கு
காவலாக இருப்பவனாம்
எங்க கருப்பசாமி
அவர் எங்க கருப்பசாமி

தட்சையை கட்டி வரான்
கை அருவா காட்டி வரான்
மீசையை முறுக்கி வரான்
முச்சந்தியில் நடந்து வரான்
எங்க கருப்பசாமி
அவர் எங்க கருப்பண்ண சாமி

வில்லாளி வீரனுக்கும்
வீர மணிகண்டனுக்கும்
இருமுடிய சுமக்கும் போது
பாதுகாக்க வருபவனாம்
எங்க கருப்பசாமி
அவர் எங்க கருப்பசாமி

கற்பூர ஆழி முன்னே
கடவுளாக நின்றிடுவார்
கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு
பாவங்களை போக்கிடுவார்
எங்க கருப்பசாமி
அவர் எங்க கருப்பசாமி

எங்க கருப்பன் வரான் – எங்க கருப்பசாமி
கார்மேகம் போல வரான் – கருப்பசாமி
அந்தா வரான் இந்தா வரான் – கருப்பசாமி
நாகவல்லி கொண்டு வரான் – கருப்பசாமி
முன்கோப காரன் வரான் – கருப்பசாமி

அருவாளு தூக்கி வரான் – கருப்பசாமி
ஜெவ்வாது வாசகாரன் – கருப்பசாமி
வெள்ளிப் பிரம்பு கொண்டு வரான் – கருப்பசாமி
வேகமாக ஆடி வரான் – கருப்பசாமி
வேகமாக ஓடி வரான் – கருப்பசாமி

வாட்ட சாட்டமாக வரான் – கருப்பசாமி
பம்பாநதி தீரத்திலே – கருப்பசாமி
கருப்பன் வரும் வேளையிலே – கருப்பசாமி
பம்பாநதி குளிச்சி வரான் – கருப்பசாமி
கருப்பசாமி ஆடி வரான் – கருப்பசாமி

கரண்ட அளவு தண்ணியிலே – கருப்பசாமி
தள்ளிக் கொண்டு வாரானப்பா – கருப்பசாமி
சாமி முட்டளவு தண்ணியிலே – கருப்பசாமி
முழுங்கி கொண்டு வாரானப்பா – கருப்பசாமி
அரையளவு தண்ணியிலே – கருப்பசாமி

துள்ளிக் கொண்டு ஓடி வரான் – கருப்பசாமி
கழுத்தளவு தண்ணியிலே – கருப்பசாமி
கருப்பசாமி நீந்தி வரான் – கருப்பசாமி
அந்தளவு தண்ணியிலே – கருப்பசாமி
அங்காரமா ஓடி வரான் – கருப்பசாமி

எங்க கருப்பன் ஓடி வரான் –
எங்க கருப்பன் ஓடி வரான் –

பம்பையிலே குளிச்சி வரான் – கருப்பசாமி
பாங்காக வரான் ஐயா – கருப்பசாமி
அந்தா வரான் இந்தா வரான் – கருப்பசாமி
பெரியான வட்டம் வரான் – கருப்பசாமி
சிரியான வட்டம் வரான் – கருப்பசாமி

கரிமலையை ஏறி வரான் – கருப்பசாமி
பகவதியை வணங்கி வரான் – கருப்பசாமி
கரியிலாந்தோடு வரான் – கருப்பசாமி
இலவம் தாவளம் கடந்து வரான் – கருப்பசாமி
சாமி முக்குழிய தாண்டி வரான் – கருப்பசாமி

அழுதாமேடு உச்சி வரான் – கருப்பசாமி
சாமி அழுதையிலே குளிச்சி வரான் – கருப்பசாமி
காளை கட்டி தொட்டு வரான் – கருப்பசாமி
சாமி பூங்காவனம் புகுந்து வரான் – கருப்பசாமி
எரிமேலி வாரானய்யா – கருப்பசாமி
வாவர் சாமி கூட வரான் – கருப்பசாமி

எரிமேலி வந்து இறங்கிய கருப்பன்
சுற்றும் முற்றும் பார்த்து
எம்பெருமான் கருப்பனுக்கு
மலர்கள் என்றால் கொள்ளை ப்ரியம்
அவர் மலர்களால் சல்லடை கட்டி
வருகின்ற வேளையில் ஆஹா ஆஹா
காண கண் கோடி வேண்டும்
அவை என்னென்ன
மலர்கள் என்று கேட்டால்

எடுத்து வைக்கும் கால்களுக்கு
சாமந்தி சள்ளடையாம்
முன்னே வைக்கும் கால்களுக்கு
முல்லைப் பூ சள்ளடையாம்
பின்னே வைக்கும் கால்களுக்கு
பிச்சி பூ சள்ளடையாம்
அள்ளி வைக்கும் கால்களுக்கு
அரளி பூ சள்ளடையாம்

துள்ளி வைக்கும் கால்களுக்கு
துளசியால சள்ளடையாம்
வீசி வைக்கும் கால்களுக்கு
வீரத்தாலே ச்ள்ளடையாம்
துள்ளி வைக்கு கால்களுக்கு
அருகம்புல் சள்ளடையாம்

உச்சந்தல கட்டி வரான் – கருப்பசாமி
புளியாட்டும் ராஜா வரான் – கருப்பசாமி
சபரிமலை காவல்காரன் – கருப்பசாமி
ஆங்காரமாய் ஓடி வரான் – கருப்பசாமி
தமிழ்நாட்டு எல்லையிலே – கருப்பசாமி

தாண்டி தாண்டி வாரானய்யா – கருப்பசாமி
செங்கோட்ட கருப்ப வரான்- கருப்பசாமி
தென்காசி சுடல வரான் – கருப்பசாமி
ஆம்பூரு சுடல வரான் – கருப்பசாமி
சாத்தானறு பூதத்தான் வரான் – கருப்பசாமி

அங்காரமாய் வாரானய்யா – கருப்பசாமி
ஆவேசமாய் வாராரய்யா – கருப்பசாமி
போராடி வாராரய்யா – கருப்பசாமி
காவலாளி வாராரய்யா – கருப்பசாமி
பாபநாசம் கோட்டை குள்ளே – கருப்பசாமி
மனப்பேச்சி கூட வரான் – கருப்பசாமி

தேவர்கள் மலர் சொரியும்
சொரிமுத்து அய்யனார் கோவில் வந்து
இறங்கிய எம்பெருமான் கருப்பன்
யார் யாரை வணங்குகிறான்
என்று கேட்டால்

என்னன்னேன் சேட்டனடா ‍‍- சாமியே
திருமகாலிங்க சாமியரே – ஐயப்போ
தட்சனாமூர்த்தி சாமி ‍‍- சாமியே
சங்கிலி பூதத்தாரே – ஐயப்போ
பாதாள பூதத்தாரே ‍‍- சாமியே
மேல் வாச பூதத்தாரே – சாமியே
சுடர் மாடன் சாமியரே ‍‍- ஐயப்போ
தலைவனான சாமியரே – சாமியே
உண்டில் மாடன் சாமியரே ‍‍- ஐயப்போ
பள்ளி மாடன் சாமியரே – சாமியே

உக்ரகாளி தாயாரே ‍‍- சாமியே
வன பேச்சி தாயாரே – ஐயப்போ
ஜக்கம்மா தாயாரே ‍‍- சாமியே
வண்டி மலச்சி தாயாரே – ஐயப்போ
பட்டராயன் சாமியரே ‍‍- சாமியே
கரடி மாடன் சாமியரே ‍‍- சாமியே
அக்ஸ்தியின் மாமுனியும் – ஐயப்போ
ஆங்காரமாய் காட்சி தந்தார் – சாமியே
அக்ஸ்தியின் மாமுனியும் – ஐயப்போ
ஆங்காரமாய் காட்சி தந்தார் – ஐயப்போ

இப்படியாக தரிசித்து கொண்டு வந்த
எம்பெருமான் கருப்பன்
இந்த ஐயப்பன் மலர் பூஜை
வருவதற்கு ஆவல் கொண்டு
கண்ணிமாரையும் சாமி மாரையும்
ஐயப்பன் மாரையும்
மாளிகை புரங்களையும்
ஆன்மீக நெஞ்சங்களையும்
வாழ்த்தி அருள வேண்டும் என்ற
எண்ணம் கொண்டு
இந்த ஐயப்பன் பூஜைக்கு
கருப்பன் வருகிறான்
ஆங்காரமாய் பரவசமாய்
உதிரமாய் ஓடி வருகிறான்

எங்க கருப்பசாமி – கருப்பசாமி
எங்க கருப்பசாமி – கருப்பசாமி
கருப்பன் வரான்
கருப்பன் வரான் – கருப்பசாமி
ஆங்காரமாய் ஓடி வரான் – கருப்பசாமி
ஆங்காரமாய் ஓடி வரான் – கருப்பசாமி

கருப்பன் வரான்
கருப்பன் வரான் – கருப்பசாமி
ஆங்காரமாய் ஓடி வரான் – கருப்பசாமி
ஆவேசமாய் தேடி வரான் – கருப்பசாமி
கருப்பன் வரான்
கருப்பன் வரான் – கருப்பசாமி
கருப்பன் வரான் கருப்பன் வரான்

எங்க கருப்பசாமி
அவர் எங்ககருப்பசாமி
எங்க கருப்பசாமி
அவர் எங்ககருப்பசாமி

எங்க கருப்பசாமி
அவர் எங்ககருப்பசாமி
எங்க கருப்பசாமி
அவர் எங்ககருப்பசாமி

எங்க கருப்பசாமி
அவர் எங்ககருப்பசாமி
எங்க கருப்பசாமி
அவர் எங்ககருப்பசாமி

ஸ்வாமியே…
சரணம் ஐயப்போ
கருப்பண்ண ஸ்வாமியே…
சரணம் ஐயப்போ
சத்குரு நாதனே…
சரணம் ஐயப்போ


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.