Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Bannari Mariyamma Song Lyrics in Tamil

Bannari Mariyamma Song Lyrics in Tamil from Solaiyamma Movie. Bannari Mariyamma Song Lyrics has penned in Tamil by Kasthuri Raja.

பாடல்:பண்ணாரி மாரியம்மா
படம்:சோலையம்மா
வருடம்:1992
இசை:தேவா
வரிகள்:கஸ்தூரி ராஜா
பாடகர்:S ஜானகி

Bannari Mariyamma Lyrics in Tamil

பெண்: பண்ணாரி மாரியம்மா
பாடி வந்தா சோலையம்மா
ஏன்டி என் வேதனை தீர்க்கல
பெண்தானே நீயும் அம்மா
பெண் மானம் போகணுமா
தாண்டி நீ வந்து ஏன் காக்கல

பெண்: பண்ணாரி மாரியம்மா
பாடி வந்தா சோலையம்மா
ஏன்டி என் வேதனை தீர்க்கல
பெண்தானே நீயும் அம்மா
பெண் மானம் போகணுமா
தாண்டி நீ வந்து ஏன் காக்கல

பெண்: செஞ்ச பாவமென்ன
சொல்லடி என் ஆத்தா
எந்தக் காயமுமே
ஆறுமே நீ பாத்தா

குழு: செஞ்ச பாவமென்ன
சொல்லடி என் ஆத்தா
எந்தக் காயமுமே
ஆறுமே நீ பாத்தா

பெண்: பண்ணாரி மாரியம்மா
பாடி வந்தா சோலையம்மா
ஏன்டி என் வேதனை தீர்க்கல

குழு: பெண்தானே நீயும் அம்மா
பெண் மானம் போகணுமா
தாண்டி நீ வந்து ஏன் காக்கல

பெண்: சீதை தீக்குளிச்சு
ராமனைத்தான் நம்ப வைச்சா
ராமாயணம் சொன்ன சேதிதான்
கோவம் கொண்டெழுந்து
கண்ணகிதான் ஊரெரிச்சா
நானும் கூட அந்த சாதிதான்

பெண்: சீதை தீக்குளிச்சு
ராமனைத்தான் நம்ப வைச்சா
ராமாயணம் சொன்ன சேதிதான்
கோவம் கொண்டெழுந்து
கண்ணகிதான் ஊரெரிச்சா
நானும் கூட அந்த சாதிதான்

பெண்: மேகம் கருக்கணும்
மே காத்து அடிக்கணும்
மும்மாரி சேர்ந்து பெய்யணும்
ஊரு மத்தியில
என் பேரு சுத்தமுன்னு
சாதி சனம் நின்னு பேசணும்

பெண்: செஞ்ச பாவமென்ன
சொல்லடி என் ஆத்தா
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா

குழு: செஞ்ச பாவமென்ன
சொல்லடி என் ஆத்தா
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா

பெண்: பண்ணாரி மாரியம்மா
பாடி வந்தா சோலையம்மா
ஏன்டி என் வேதனை தீர்க்கல

குழு: பெண்தானே நீயும் அம்மா
பெண் மானம் போகணுமா
தாண்டி நீ வந்து ஏன் காக்கல

பெண்: பாதை மாறலடி
பாயெடுத்து போடலடி
பத்தினிய பதற வைச்சே
சாமி சந்நதிக்கு
சத்தியமா சேர வந்த
பூவு ஒண்ண கருக வைச்சே

பெண்: பாதை மாறலடி
பாயெடுத்து போடலடி
பத்தினிய பதற வைச்சே
சாமி சந்நதிக்கு
சத்தியமா சேர வந்த
பூவு ஒண்ண கருக வைச்சே

பெண்: ஊரு சிரிச்சதும்
ஓயாம ஏசினதும்
உன் காதில் கேட்கவில்லையா
நாதியற்று இப்ப
நானாக தவிக்கிறன்
நீ கண்ணில் பார்க்கவில்லையா

பெண்: செஞ்ச பாவமென்ன
சொல்லடி என் ஆத்தா
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா

குழு: செஞ்ச பாவமென்ன
சொல்லடி என் ஆத்தா
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா

பெண்: பண்ணாரி மாரியம்மா
பாடி வந்தா சோலையம்மா
ஏன்டி என் வேதனை தீர்க்கல

குழு: பெண்தானே நீயும் அம்மா
பெண் மானம் போகணுமா
தாண்டி நீ வந்து ஏன் காக்கல


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.