Un Uthattora Sivappe Song Lyrics in Tamil

Un Uthattora Sivappe Song Lyrics in Tamil from Panchalankurichi Movie. Un Uthattora Sivappe Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

பாடல்:உன் உதட்டோர சிவப்பே
படம்:பாஞ்சாலங்குறிச்சி
வருடம்:1996
இசை:தேவா
வரிகள்:வைரமுத்து
பாடகர்:ஹரிஹரண்,
அனுராதா ஸ்ரீராம்

Un Uthattora Sivappe Lyrics in Tamil

ஆண்: தன நானா நானே நாநா
தன நானா நானே தனநானே நாநா

ஆண்: உன் உதட்டோர சிவப்பே
அந்த மருதாணி
கடனா கேட்கும்
கடனா கேட்கும்

ஆண்: நீ சிரிச்சாலே சில நேரம்
அந்த நிலவு வந்து
உளவு பார்க்கும்
உளவு பார்க்கும்

ஆண்: என் செவ்வாழை தண்டே
என் செவ்வாழை தண்டே
சிறு காட்டு வண்டே
உன்ன நெனச்சு தான் எச பாட்டு
கொஞ்சம் நெருங்கி வா இத கேட்டு

பெண்: ஏன் மம்முத அம்புக்கு
இன்னும் தாமசம் ஆ
ஆண்: அடியே அம்மணி
வில்லு இல்ல இப்ப கை வசம் ஆ

பெண்: ஏன் மல்லு வேட்டி மாமா
மனசிருந்தா மார்க்கம் இருக்குது
ஆண்: என்னை பொசுக்குன்னு கவுக்க
பொம்பளைக்கு நோக்கம் இருக்குது

பெண்: முருகா மலை காட்டுக்குள்ள
விறகு எடுக்கும் வேலையில
தூரத்துல நின்னவரே
தூக்கி விட்டால் ஆகாதா

ஆண்: பட்ட விறக தூக்கி விட்டா
கட்ட விரலு பட்டு புட்டா
விறகில்லாம தீ புடிக்கும்
வெட்கம் கெட்டு போகாதா

பெண்: நீ தொடுவதா தொட்டுக்கோ
சொந்தத்துல வரைமுறை இருக்கா
ஆண்: நீ பொம்பள தானே
உனக்கு அது நியாபகம் இருக்கா

பெண்: உன் நெனப்பு தான்
நெஞ்சுக்குள்ள பச்சை குத்துது ஆ
ஆண்: அட உன் கிறுக்குல
எனக்கு இந்த பூமி சுத்துது

ஆண்: சிங்கம் புலி கரடி கண்டா
சேர்த்தடிக்க கை துடிக்கும்
பொட்டு கன்னி உன்ன கண்டா
புலி கூட தொட நடுங்கும்

பெண்: உம்ம நெனச்சு பூசையில
வேப்பெண்ணையும் நெய் மணக்கும்
நீ குளிச்ச ஓடையில
நான் குளிச்சா பூ மணக்கும்

ஆண்: ஏய் வெட்கம் கெட்ட பெண்ணே
என்னை ஏன் தூக்கி சுமக்குற
பெண்: என் மனசுக்குள் புகுந்து
ஏன் மச்சான் இறங்க மறுக்குற

ஆண்: அடி என் நெஞ்சிலே
ஏண்டியம்மா வத்தி வைக்குற
பெண்: உன் ஆசைய
எதுக்கு இன்னும் பொத்தி வைக்குற ஆ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *