Malare Mounama Song Lyrics in Tamil from Karnaa Movie. Paathi Jeevan Kondu or Malare Mounama Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
பாடல்: | மலரே மௌனமா |
---|---|
படம்: | கர்ணா |
வருடம்: | 1995 |
இசை: | வித்யாசாகர் |
வரிகள்: | வைரமுத்து |
பாடகர்: | SP பாலசுப்ரமணியம், S ஜானகி |
Malare Mounama Lyrics in Tamil
ஆண்: மலரே மௌனமா
மௌனமே வேதமா
பெண்: மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே
ஆண்: மலரே மௌனமா
மௌனமே வேதமா
ஆண்: பாதி ஜீவன் கொண்டு
தேகம் வாழ்ந்து வந்ததோ ஹான்
பெண்: மீதி ஜீவன் என்னைப்
பார்த்தபோது வந்ததோ
ஆண்: ஏதோ சுகம் உள்ளூறுதே
பெண்: ஏனோ மனம் தள்ளாடுதே
ஆண்: ஏதோ சுகம் உள்ளூறுதே
பெண்: ஏனோ மனம் தள்ளாடுதே
ஆண்: விரல்கள் தொடவா
பெண்: விருந்தை பெறவா
ஆண்: மார்போடு கண்கள் மூடவா
ஆண்: மலரே மௌனமா
பெண்: மலர்கள் பேசுமா
பெண்: கனவு கண்டு எந்தன்
கண்கள் மூடிக் கிடந்தேன்
ஆண்: காற்றைப் போல வந்து
கண்கள் மெல்லத் திறந்தேன்
பெண்: காற்றே என்னைக் கில்லாதிரு
ஆண்: பூவே என்னைத் தள்ளாதிரு
பெண்: காற்றே என்னைக் கில்லாதிரு
ஆண்: பூவே என்னைத் தள்ளாதிரு
பெண்: உறவே உறவே
ஆண்: உயிரின் உயிரே
பெண்: புது வாழ்க்கை தந்த வள்ளலே
ஆண்: மலரே மௌனமா ஆ
மௌனமே வேதமா
பெண்: மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே
ஆண்: மலரே
பெண்: ஹ்ம்ம்
ஆண்: மௌனமா
பெண்: ஹ்ம்ம்
ஆண்: மௌனமே
பெண்: ஹ்ம்ம்
ஆண்: வேதமா
பெண்: ஆஆ