Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Sivappu Selai Kattikittu Song Lyrics

Sivappu Selai Kattikittu Song Lyrics in Tamil from Amman Songs. L.R Eswari’s Famous Sivappu Selai Kattikittu Song Tamil Lyrics.

பாடல் வரிகள்

செவப்பு சேலை கட்டிக்கிட்டு
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு
வேற்காட்டு கருமாரி
ஆடி வந்தாளாம்

செவப்பு சேலை கட்டிக்கிட்டு
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு
வேற்காட்டு கருமாரி
ஆடி வந்தாளாம்

அவள் விருப்புடனே தொழுபவரின்
வினைகளையே ஓட வைத்து
பொறுப்புடனே நம்மை காக்க
ஆடி வந்தாளாம்

மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா

சிறப்புடனே பவனி வந்து
சிந்தையிலே குடி புகுந்து
சிறப்புடனே பவனி வந்து
சிந்தையிலே குடி புகுந்து
கருணை மனம் கொண்டு
நம்மை காக்க வந்தாளாம்

அவ மரகதத்தில் திலகமிட்டு
மரிக்கொழுந்து மலரெடுத்து
மரகதத்தில் திலகமிட்டு
மரிக்கொழுந்து மலரெடுத்து
சிரத்தினிலே சூடிக்கொண்டு
பவனி வந்தாளாம்

மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா

உன் வேப்பிலையும் திருநீரும்
வேண்டியதை தந்திடுமே அம்மா
காப்பது உன் திரிசூலம்
கவலை யாவும் தீரும் அம்மா

மாபெரும் பக்தர்கள் கூட்டம்
உன் சன்னதியில் அம்மா
ஆபத்தில் உதவிட உன் ஆயிரம்
கைகள் அணைத்திடுமே அம்மா

தொட்டியங்குளந்தன்னில் வாழும்
எங்க மகமாயி
மட்டில்லாத பாசம் கொண்ட
எங்க மகமாயி

சக்தியிலே நெருப்பெடுத்து
சதிராடும் மாரி
சக்தியிலே நெருப்பெடுத்து
சதிராடும் மாரி

கட்டி காக்கும் அன்னை
போல காத்திடுவாள் மாரி
கட்டி காக்கும் அன்னை
போல காத்திடுவாள் மாரி

செவப்பு சேலை கட்டிக்கிட்டு
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு
வேற்காட்டு கருமாரி
ஆடி வந்தாளாம்

அவள் விருப்புடனே தொழுபவரின்
வினைகளையே ஓட வைத்து
பொறுப்புடனே நம்மை காக்க
ஆடி வந்தாளாம்

மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
கருமாரியம்மா


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.