Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Kannoram or Sollatha Kadhal Ellam Kallaraiyil Song Lyrics

Kannoram or Sollatha Kadhal Ellam Kallaraiyil Song Lyrics in Tamil. Sollatha Kadhal Ellam Kallaraiyil Song Lyrics penned by T.Suriavelan.

Sollatha Kadhal Ellam Kallaraiyil Lyrics

ஆண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ

ஆண்: உன் கண்ணோரம்
கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம்
நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு
உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு
ஒன்றாகி தொலைந்தேன்

பெண்: உன் கண்ணோரம்
கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம்
நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு
உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு
ஒன்றாகி தொலைந்தேன்

ஆண்: நான் போகின்ற
வழியெல்லாம் நீ அல்லவா
உயிர் சுமக்கின்ற
காதலும் உனது அல்லவா

பெண்: உன் பிழை தாண்டி
நான் உன்னை நேசிக்கவா
இல்லை நீ இன்றி
நான் வாழ வழி தேடவா

ஆண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
பெண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ

ஆண்: ஓ நம் காதல் பாவம் என்றால்
மீண்டும் மீண்டும் செய்வேனோ
நீ இன்றி மண்ணில் வாழ
இன்றே சாவேனோ

பெண்: என் இதய சில்லில் கூட
அன்பே உந்தன் பெயர் தானோ
ஆயிரம் ஜென்மம் சேரும்
காதல் நீதானோ

ஆண்: உன் மூச்சுக் காற்றினை
நான் தொழுதிடவா
பெண்: என் காதல் யாவையும்
வாடகை விடவா

ஆண்: காதலில் ஆழ்கடல் நான் அறிவேனே
பெண்: உன்னோடு மூழ்கிட தவம் கிடப்பேனே
ஆண்: நான் உனதில்லை என்றால் இறக்கவா
உயிரே உனதாய் நான் பிறக்கவா

பெண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ

ஆண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் விழிகளில் தானோ

ஆண்: சொல்லாத காதல் எல்லாம்
கல்லறையில்லா சேரும்
நீ விட்டு போன தூரம்
எல்லாம் தீயாகும்

பெண்: உன்னாலே உள்ளுக்குள்ளே
கண்ணீரோடு பேராட்டம்
ஆறாத உன் நினப்பு
என்னை கொல்லட்டும்

ஆண்: நீ நெஞ்சின் ஓரத்தில்
வலிக்கின்ற பாதியோ
உன் முதல் கவிதையில்
நான் இனி இல்லையோ

ஆண்: ஆயுளை மனதினை
அறிந்தவன் எவனோ
பெண்: நீ அறிவாய் என
தவித்து நின்றேனோ
நான் உனதில்லை என்றால் இறக்கவா
உயிரே உனதாய் நான் பிறக்கவா

ஆண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ

ஆண்: உன் கண்ணோரம்
கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம்
நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு
உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு
ஒன்றாகி தொலைந்தேன்

பெண்: நான் போகின்ற
வழியெல்லாம் நீ அல்லவா
உயிர் சுமக்கின்ற காதலும்
உனது அல்லவா

ஆண்: உன் சிறைமீட்டு தினம்
உன்னை நான் காக்கவா
இல்லை நீ இன்றி
நான் வாழ வழி தேடவா

ஆண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
பெண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் விழிகளில் தானோ


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.