Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Thiruppavai Pasuram 5 Lyrics in Tamil

Thiruppavai Pasuram 5 Lyrics in Tamil from Sri Andal Thiruppavai Book. Thiruppavai Pasuram 5 Lyrics has written in Tamil by Andal.

Thiruppavai Pasuram 5 Tamil Lyrics

மாயனை மன்னு
வடமதுரை மைந்தனை
தூய பெருநீர்
யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில்
தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம்
செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து
நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி
மனத்தினால் சிந்திக்க

போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்
செப்பேலோர் எம்பாவாய்

பாடலின் பொருள்

வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.

பாடலின் விளக்கம்

உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை. தேவகி தாய்க்கு கண்ணனை பெற்றதால் பெருமை. “ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று அவள் பெருமைப்படுகிறாள். குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் உட்கருத்து.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.