Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Thiruppavai Pasuram 2 Lyrics in Tamil

Thiruppavai Pasuram 2 Lyrics in Tamil from Sri Andal Thiruppavai Book. Thiruppavai Pasuram 2 Lyrics has written in Tamil by Andal.

Thiruppavai Pasuram 2 Tamil Lyrics

வையத்து வாழ்வீர்காள்
நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள்
கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற
பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
நாட்காலை நீராடி

மையிட் டெழுதோம்
மலரிட்டு நாம் முடியோம்
செய்யா தனசெய்யோம்
தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும்
ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி
உகந்தேலோ ரெம்பாவாய்

பாடலின் பொருள்

திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக்கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக்கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.

பாடலின் விளக்கம்

ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத் தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.