Boys Movie Ale Ale or Egiri Kuthithen Song Lyrics in Tamil Font. Egiri Kuthithen or Ale Ale Song Lyrics has penned in Tamil by Kabilan.
படத்தின் பெயர்: | பாய்ஸ் |
---|---|
வருடம்: | 2003 |
பாடலின் பெயர்: | எகிறி குதித்தேன் |
இசையமைப்பாளர்: | ஏ.ஆர்.ரஹ்மான் |
பாடலாசிரியர்: | கபிலன் |
பாடகர்கள்: | கார்த்திக், சித்ரா சிவராமன் |
பாடல் வரிகள்:
ஆண்: எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது
ஆண்: அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலே
ஆண்: ஹே ஆனந்த தண்ணீர்
மொந்து குளித்தேன்
பெண்: ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
ஆண்: கற்கண்டைத் தூக்கிக் கொண்டு
நடந்தேன் ஒரு எறும்பாய்
பெண்: நான் தண்ணீரில் மெல்ல மெல்ல
நடந்தேன் ஒரு இலையாய்
ஆண்: அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலே
பெண்: அலே அலே அலே அலே
ஆண்: அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
ஆண்: காதல் சொன்ன கனமே
அது கடவுளைக் கண்ட கனமே
காற்றாய் பறக்குது மனமே ஓ
இருவரும்: காதல் சொன்ன கனமே
அது கடவுளைக் கண்ட கனமே
காற்றாய் பறக்குது மனமே ஓ
ஆண்: நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல்முழுதும் நிலா உதிக்கிறதே
பெண்: வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஆண்: ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே
பெண்: அலே அலே அலே அலே
ஆண்: அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
பெண்: கலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்
ஆண்: காதல் சொன்ன கனமே
அது கடவுளைக் கண்ட கனமே
காற்றாய் பறக்குது மனமே ஓ
இருவரும்: காதல் சொன்ன கனமே
அது கடவுளைக் கண்ட கனமே
காற்றாய் பறக்குது மனமே ஓ
ஆண்: எகிறி குதித்தேன்
பெண்: வானம் இடித்தது
ஆண்: பாதங்கள் இரண்டும்
பெண்: பறவையானது
ஆண்: விரல்களின் காம்பில்
பெண்: பூக்கள் முளைத்தது
ஆண்: புருவங்கள் இறங்கி
பெண்: மீசையானது
ஆண்: அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலே
பெண்: மணல்முழுதும் இன்று சர்க்கரையா
கடல்முழுதும் இன்று குடிநீரா
ஆண்: கரைமுழுதும் உந்தன் சுவடுகளா
அலைமுழுதும் உந்தன் புன்னகையா
பெண்: காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே
ஆண்: அலே அலே அலே அலே
பெண்: அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
ஆண்: வானவில் உரசியே பறந்ததும்
இந்த காக்கையும் மயில் என மாறியதே
ஆண்: காதல் சொன்ன கனமே
அது கடவுளைக் கண்ட கனமே
காற்றாய் பறக்குது மனமே ஓ
இருவரும்: காதல் சொன்ன கனமே
அது கடவுளைக் கண்ட கனமே
காற்றாய் பறக்குது மனமே ஓ