Nanaga Nanillai Thaye Song Lyrics

Nanaga Nanillai Thaye Song Lyrics in Tamil from Thoongathe Thambi Thoongathe Movie. Nanaga Nanillai Thaye Song Lyrics penned by Vaali.

படத்தின் பெயர்:தூங்காதே தம்பி தூங்காதே
வருடம்:1983
பாடலின் பெயர்:நானாக நானில்லை தாயே
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:SP பாலசுப்ரமணியம்

பாடல் வரிகள்:

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

கீழ் வானிலே ஒளி வந்தது
கூண்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்

நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர்வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை

தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *