Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Merku Seemaiyile Song Lyrics in Tamil

Merku Seemaiyile Song Lyrics from Ettupatti Rasa Tamil Movie. Merku Seemaiyile Song Lyrics penned in Tamil by Kasthuri Raja.

படத்தின் பெயர்:எட்டுப்பட்டி ராஜா
வருடம்:1997
பாடலின் பெயர்:மேற்கு சீமையிலே
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:கஸ்தூரி ராஜா
பாடகர்கள்:தேவா, ஸ்வர்ணலதா

பாடல் வரிகள்:

ஆண்: மேற்கு சீமையிலே
வேகாட்டு கோவிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா

ஆண்: காட்டு புலி ஒன்னு
காயம்பட்டு போச்சே
காரணம் யார் சொல்லம்மா

ஆண்: சாட்டை உடுக்கையில்
சத்தம் முழங்கிட
தாயே நீ பொங்கிடம்மா

ஆண்: சாட்டை உடுக்கையில்
சத்தம் முழங்கிட
தாயே நீ பொங்கிடம்மா
சூலக்காளியே ஆத்தா தாயே
சூலக்காளியே ஆத்தா தாயே

ஆண்: மேற்கு சீமையிலே
வேகாட்டு கோவிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா

ஆண்: கொட்டு சத்தம் கொட்டு சத்தம்
கேட்கலையா சொல்லு தாயே
வெட்டருவா வேலு கம்பு
சூலாயுதம் ஏந்தி வாடி

பெண்: எட்டு திசை கட்டி
ஆண்டுவந்தானே
எத்தனையோ கஷ்டம்
தீர்த்து வச்சானே தாயே
ஆண்: அம்மா

பெண்: ஊரெல்லாம் உசுருன்னு
நேசம் வைச்சேனே
சனமெல்லாம் பெருசுனு
ஆசை பட்டானே தாயே
ஆண்: அம்மா

பெண்: மகமாயி தாயே நீ மனம் மாறனும்
மகராசன் கோட்டையில் குடி ஏறனும்
கருமாரி தாயே நீ கண் பார்க்கனும்
காயங்கள் மாறித்தான் மண்ணாலானும்

பெண்: குங்கும காரியே
குறை தீர்க்கும் தேவியே
உன் பிள்ளை வாடுதம்மா
முத்துமாரியே ஆத்தா தாயே

பெண்: காதல் வசப்பட்டு
பார்த்தது தப்பா
கழுத்தில் மாலை விழ
நினைச்சது தப்பா தாயே
ஆண்: அம்மா

பெண்: கல்யாணம் தான்
மாறி போனது தப்பா
காத்திருந்து நானும்
வாழ்ந்தது தப்பா தாயே
ஆண்: அம்மா

பெண்: சூறாவளி காத்து சுத்தி வந்து
சொந்தமெல்லாம் மாறி போனதம்மா
காத்திருந்து சொந்தம் வேணும்முன்னு
நேத்திக்கடன் செய்ய வந்தேனம்மா

பெண்: பூவுக்கும் பொட்டுக்கும்
ஆசைப்பட்டு வந்தேன்
வேற என்ன கேட்டேனம்மா
முத்துமாரியே ஆத்தா தாயே

பெண்: மேற்கு சீமையிலே
வேகாட்டு கோவிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா

பெண்: மேற்கு சீமையிலே
வேகாட்டு கோவிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா

பெண்: காட்டு புலி ஒன்னு
காயம்பட்டு போச்சே
காரணம் யார் சொல்லம்மா

பெண்: சாட்டை உடுக்கையில்
சத்தம் முழங்கிட
தாயே நீ பொங்கிடம்மா
சூலக்காளியே ஆத்தா தாயே
சூலக்காளியே ஆத்தா தாயே

Search

All lyrics are provided for educational purpose only.