Mama Nu Koopida Than Song Lyrics in Tamil. Tamil Village Folk Mamanu Koopidathan Manasu Solluthu Song Lyrics by Madhuramalli TV.
பாடல் வரிகள்:
மாமா-னு கூப்பிடத்தான்
மனசே சொல்லுது
மனசெல்லாம் உன்னை பத்தி
நினைப்பே கொல்லுது
மாமா-னு கூப்பிடத்தான்
மனசே சொல்லுது
மனசெல்லாம் உன்னை பத்தி
நினைப்பே கொல்லுது
நீ எந்த ஊரு என்ன
பேரு எனக்கு தெரியல
உன்னை கண்டு நானும் இப்ப
பேசிடத்தான் வழியில்ல
எங்க ஊரு திருவிழாவுக்கு
எதுக்கு வந்தீயோ
என்னைத்தான் கைப்புடிக்க
கனவு கண்டீயோ
எங்க ஊரு திருவிழாவுக்கு
எதுக்கு வந்தீயோ
என்னைத்தான் கைப்புடிக்க
கனவு கண்டீயோ
மாமா-னு கூப்பிடத்தான்
மனசே சொல்லுது
மனசெல்லாம் உன்னை பத்தி
நினைப்பே கொல்லுது
உன்னை பார்த்த நாளிலிருந்து
எனக்கு உறக்கம் வல்ல
கண்ணால் பாக்க காத்து கெடக்கேன்
கொஞ்சம் எறக்கம் காட்டுங்க
சீமை காளை போல நீயும்
இப்ப திமிரி நிக்க
உன்னை சீண்டி பாக்கத்தானே
என் மனசு சொல்லுது
மல்லு வேட்டி கட்டி நீ
என் எதிரே வந்து நின்னா
நெல்லு கதிர் போல நான்
தலை குணிவேனே
மல்லுக்கட்டி கட்டிலேல
புள்ளைகுட்டி பெத்துக்கலாம்
என்னென்னமோ மனசுகுள்ள
கனவு கண்டேனே
மாமா-னு கூப்பிடத்தான்
மனசே சொல்லுது
மனசெல்லாம் உன்னை பத்தி
நினைப்பே கொல்லுது
என் கடைசி வரை நீதான்
என கவுளி கத்த
இந்த மடைச்சியோட மனசுக்குள்ள
மணி அடிக்குதையா
உன் மடியிலதான் எனக்கு
மட்டும் எடம் கொடுத்தா
உன் பிடியிலதான் நானும்
கெடக்க காத்துக்கெடக்கேனே
உலகமே ஒன்னா என்னை
எதுத்து நின்னா என்ன
உனக்கு ஒண்ணுன்னா
என் உசுர கொடுப்பேனே
பழகு-னு நானும் வரேன்
வெலகித்தான் நீயும் போற
புரிஞ்சுக்கடா உனக்கு
தாயா இருப்பேனே
மாமா-னு கூப்பிடத்தான்
மனசே சொல்லுது
மனசெல்லாம் உன்னை பத்தி
நினைப்பே கொல்லுது