படத்தின் பெயர் | 3 |
---|---|
வருடம் | 2012 |
பாடலின் பெயர் | நீ பாா்த்த விழிகள் |
இசையமைப்பாளர் | அனிருத் ரவிச்சந்தர் |
பாடலாசிரியர் | தனுஷ் |
பாடகர்கள் | விஜய் யேசுதாஸ், ஸ்வேதா மோகன் |
பாடல் வரிகள்:
ஆண்: நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
பெண்: இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பாா்த்தனால் நம் வசம் வருமா
உயிா் தாங்குமா என் விழிகளில் முதல் வலி
ஆண்: நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக
ஆண்: நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
ஆண்: நிழல் தரும் இவள் பாா்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே உயிரே உயிா் நீதான் என்றால்
உடனே வருவாய் உடல் சாகும் முன்னாள்
பெண்: அனலின்றி குளிா் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
ஆண்: இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே
ஆண்: நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக
பெண்: நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
ஆண்: இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பாா்த்தனால் நம் வசம் வருமா
உயிா் தாங்குமா ஓஹோ…