Vaa Vaa Penne Song Lyrics from Uriyadi 2 Movie in Tamil. Vaa Vaa Penne Song Lyrics was written by Vijay Kumar and Nagaraji. வா வா பெண்ணே பாடல் வரிகள் தமிழ் மொழியில். In Tamil, Vaa Vaa Penne Song music was composed by Govind Vasantha. Vaa Vaa Penne Song was sung by Sid Sriram and Priyanka in tamil.
படத்தின் பெயர் | உறியடி 2 |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | வா வா பெண்ணே |
இசையமைப்பாளர் | கோவிந்த் வசந்தா |
பாடலாசிரியர் | விஜய் குமார், நாகராஜி |
பாடகர்கள் | சித் ஸ்ரீராம், பிரியங்கா |
பாடல் வரிகள்:
ஆண்: வா வா பெண்ணே என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்
வா வா கண்ணே என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம் செல்வோம்
ஆண்: என் இசை நீயே உன் கவிதை நானே
இருவரும் இணைந்தே புது பாடல் செய்வோம்
என் இசை நீயே உன் கவிதை நானே
முடிவில்லா முதற்காதல் செய்வோம் வருவாய் நீயே
ஆண்: வா வா பெண்ணே என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்
வா வா கண்ணே என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம் செல்வோம்
பெண்: நாணம் மாறும் மனமோ தடுமாறும்
மௌனம் தீரும் இன்பம் சேரும்
மீண்டும் மீண்டும் பார்த்திடவே தோன்றும்
தோன்றும் வார்த்தை தொலைந்தே போகும்
ஆண்: நேற்றிரவு நான் விழித்திருந்தேன்
காரணம் நீ கண்ணே காரணம் நீ
அதிகாலையில் நான் விழித்து கொண்டேன்
காரணம் நீ அன்பே காரணம் நீ
ஆண்: நிழலாய் நானே உடன் வருவேனே
தனிமை தொலையும் புது இனிமை இனி உருவாகும்
புவியிசை தோற்கும் ஆசை பிறக்கும்
நம்மிசை சேர்க்கும் என் திசைகளும் அதை ஏற்கும்
பெண்: காணும் யாவும் புதிதாய் தெரியும்
வானில் பறக்க சிறகுகள் விரியும்
ஏனோ ஏனோ மனத்திரை மறையும்
இதுவே காதல் என்றே புரியும்
இருவரும்: வா வா பெண்ணே என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்
வா வா கண்ணே என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம் செல்வோம்
பெண்: வா வா அன்பே வழித்துணை நானே
நீயும் நானும் ஓர் உயிர் தானே
வா வா அன்பே உன் துணை நானே
நீ என் வாழ்வின் புது வரம்தானே