படத்தின் பெயர் | என்.ஜீ.கே |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | அன்பே பேரன்பே |
இசையமைப்பாளர் | யுவன் சங்கர் ராஜா |
பாடலாசிரியர் | உமா தேவி |
பாடகர்கள் | சித் ஸ்ரீராம், ஷ்ரேயா கோஷல் |
பாடல் வரிகள்:
ஆண்: அன்பே அன்பே
பேரன்பே பேரன்பே
பெண்: ஏனோ இரவோடு ஒளியாய்கூடும்
உறவொன்று கேட்கிறேன்
வரை மீறும் இவளின் ஆசை
நிறைவேறப் பார்க்கிறேன்
நதி சேரும் கடலின்மீது
மழை நீராய் சேருவேன்
பெண்: அமுதே பேரமுதே
பெண் மனதின் கனவின்
ஏக்கம் தீர்க்குமா ஏறக்குமா
பெண்: மதியை தன் மதியை
இவன் அழகின் பிம்பம்
கண்கள் பார்க்குமா தோற்குமா
ஆண்: மழை வானம் தூறும்போது
மணலென்ன கூசுமோ
மலரோடு மலர்கள் கூட
ஊரென்ன தூற்றுமோ
ஆண்: திரையே திரை கடலே
உன் அதிரும் அன்பு
மதிலை தாண்டுதே தூண்டுதே
பெண்: நெஞ்சோரம் தூங்கும் மோகம்
கண்ணோரம் தூபம் போட
சொல்லாத ரகசியம் நீதானே
ஊர்க்கேட்க ஏங்குதே
பெண்: தனிமையில் துணைவரும்
உன் யோசனை
நினைவினில் மணக்குது
உன் வாசனை
எல்லாமே ஒன்றாக மாறுதே
மனந்திட சேவல் கூவுதே
ஆண்: கோடை காலத்தின் மேகங்கள்
கார்காலம் தூறும்
ஆளில்லாத காட்டிலும்
பூபாளம் கேட்கும்
இருவரும்: அன்பே பேரன்பே
நெடுவாழ்வின் நிழல்கள்
வண்ணம் ஆகுதே, ஆகுதே
உறவே, நம் உறவே
ஒரு அணுவின் பிரிவில்
அன்றில் ஆகுதே ஆகுதே
ஆண்: உறையாத சொல்லின் பொருளை
மொழி இங்கு தாங்குமோ
உறவாக அன்பில் வாழ
ஒரு ஆயுள் போதுமோ