Uyir Uruvaatha Song Lyrics in Tamil from Iravukku Aayiram Kangal Movie. Uyir Uruvaatha Song Lyrics is written by Sam.C.S. உயிர் உருவாத பாடல் வரிகள் தமிழ் மொழியில்.
படத்தின் பெயர் | இரவுக்கு ஆயிரம் கண்கள் |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | உயிர் உருவாத |
இசையமைப்பாளர் | ஷாம்.சி.எஸ் |
பாடலாசிரியர் | ஷாம்.சி.எஸ் |
பாடகர் | சத்யா பிரகாஷ், சின்மயி |
பாடல் வரிகள்:
ஆண்: உயிர் உருவாத
உருக்குளைக்காத
என்னில் வந்து சேர
நீ யோசிக்காத
ஆண்: திசை அறியாத
பறவையைப்போல
பறக்கவும் ஆச
உன்கூட தூர
பெண்: வாழ்கை தீர தீர
வா என் நிழலாக் கூட
சாகும் தூரம் போக
துணையா நீயும் தேவை
ஆண்: நான் உன் கூட…
பெண்: உன் நெனப்பு
நெஞ்சுக் குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்ன சுத்தி சுத்தி கெடக்கு
பெண்: உன் நெனப்பு
நெஞ்சுக் குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்ன சுத்தி சுத்தி கெடக்கு
பெண்: மனசுல ஒரு வித வழிதான்
சுகமா சுகமா
எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்
நெஜமா நெஜமா
பெண்: கண்ணே கண்ணே
காலம் தோறும்
என் கூட நீ மட்டும்
போதும் போதும்
பெண்: நீ நாளும்…
ஆண்: நான் முழுசா
உன்ன எனக்குள்ள பொதச்சேன்
என் உசுர அழகே
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்
ஆண்: நான் முழுசா
உன்ன எனக்குள்ள பொதச்சேன்
என் உசுர அழகே
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்
ஆண்: இனி வரும் ஜென்மம் மொத்தம்
நீயும் தான் உறவா வரணும்
மறுபடி உனக்கென பிறந்திடும்
வரம் நான் பெறனும்
ஆண்: பெண்ணே பெண்ணே
வாழ்க நீள
என் கூட நீ மட்டும்
போதும் போதும்
ஆண்: நீ நாளும்…
பாடலின் விவரங்கள்:
உயிர் உருவாத என்னும் பாடலானது இரவுக்கு ஆயிரம் கண்கள் என்கிற படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை சத்யா பிரகாஷ், சின்மயி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலை சாம்.சி.எஸ் எழுதி இதற்கு இசையமைத்துள்ளார். இந்த பாடலானது 2018-ம் ஆண்டு திங்க் மியூசிக் இந்தியா என்னும் யூடுப் சேனலில் வெளியிடப்பட்டது.
படத்தின் விவரங்கள்:
இரவுக்கு ஆயிரம் கண்கள் என்கிற திரைப்படத்தினை மு.மாறன் இயக்கியுள்ளார். இதில் அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார், வித்யா பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒரு இரவில் நிகழும் நிகழ்வினை பல்வேறு கோணங்களில் காண்பித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். மேலும் விவரங்களுக்கு இங்கே தொடவும்.
fantastic website,,,Its very useful ….I loved it